CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வியாழன், 12 பிப்ரவரி, 2009

அமைதியை எங்கே தேடுவது..?


அமைதி
ஆண்டவனின் சன்னிதி.
ஆள் இல்லாத அண்டங்களின் ஆரம்ப கால அவதி.

அமைதி...
கல்லரையின் விதி.
அதுவே நம் வாழ்க்கையின் காலாவதி.

அமைதி,,,
சிலருக்கு அது இனிமை...
அறுசுவை படைக்கும் கவிஞனுக்கு அங்கு தான் எழும் கற்பனை.

அமைதி,,,
சிலருக்கு அது கட்டாய கடமை.
கணவனை இழந்த பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட தண்டனை.

அமைதி,,,
சிலருக்கு அது சோதனை...
சிறை கைதிகளுக்கு கிடைத்த போதனை.

ஆமைதி,,,
சிலருக்கு அது கொடுமை...
காது கேளாதவர்களுக்கு பெறும் வேதனை.

இரவுக்கு அமைதி...பனித்திரை.

மனசுக்கு அமைதி...மாசு இல்லாத யாத்திரை.

மனிதனுக்கு அமைதி...நல்ல நித்திரை.
சில சமயங்களில் மாத்திரை.

இன்றோ,,,
அமைதி கூட ஆரவாரமாகவே இருக்கிறது...
கடல் அலைகள் கூட கரையை வந்து சேறும் போது கூச்ச்ல் போட்டுக் கொண்டு தான் வருகிறது.
அந்த,,,
அமைதியை எங்கே தேடுவது..?
அதை இங்கே தேடுவதர்க்குள்ளேயே அமைதி எங்கோ ஓடி விடுகிறது.

2 கருத்துகள்:

நிலா சொன்னது…

unmai varigal......
ithuvum oru prasavam,
pala vaartaigalai kondu uruvaana unmai varigal petredutathu oru azhagiya kavithai, muniswaranin arputha kavithai....
keep it up fren...

சுவரன் சொன்னது…

nandri
en kavithai tholiyea.
ovvoru kavhayum enakku ovvoru prasavam...
intha kavithai kalham enathu katpanai pravesam.
thanggalai poandroarin neasam,,,
en katpanai kalhatthil iniyae vaasanggalai alli veesum.

nandri.