CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மழலை லீலைகள்


முடிந்தவை எல்லாம் வாழ்க்கை குறிப்பில் சரித்திரம் ஆகுமே...

கல் வெட்டுகள் போலே.
கடந்தவை எல்லாம் பத்திரமாக இதய பதிவேட்டில் அடங்குமே...
இசைத் தட்டு போலே.
மறையாது...
ஆழியாது...
பதிந்து விட்ட நினைவலைகள்,,,
என்றாவது ஒரு நொடி இலேசாக இறக்கை விரித்து விட்டுப் போகும்...
சிந்தையிலே.

சில நேரம் சிரிக்கத் தோன்றும்...
சில நேரம் அழுதிட தோன்றும்...
அந்த பருவ கால ஞாபகங்கள் நம்மை நினைக்கச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்றும்.

பேசிய மழலையின் அர்த்தம் புரியாது...
ஆடிய ஆட்டத்தின் முடிவு அறியாது...
கண்ட காட்சிகளின் சாட்சி தெரியாது...
இந்த உணரா பருவம் இல்லையென்றால்,,,
மனித வாழ்க்கை நிறையாது.

ஏன் வந்தோம்..?
எதற்க்கு வந்தொம்..?
என்ற வினாவையும் விதைக்காத,,,
பதிலையும் புதைக்காத பருவம்...
ஒரு விசித்திரமான விளையாட்டு மைதானம்.

கள்ளம் இல்லா வெள்ளை மனம்...
கபடம் இல்லா பிள்ளை மனம்...
எங்கு வாங்கினோம்..?
குழந்தை பருவம் என்பது,,,
மகிழ்ச்சி மொட்டுகள் மட்டுமே பூக்கும் பூங்காவனம்.

கவலைகள் இல்லை...
கலக்கம் இல்லை...
கனம் அறிந்த கண்ணீருக்கு அவசியம் இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லை...
எதிர்ப்புகள் இல்லை...
எதிரே நிற்பது எதுவும் எதிரிகள் இல்லை.

பறந்தாடிய பருவம்...
பருவ காற்றின் சூழ்ச்சியால் பறந்தோடிய மாயம்.
நெஞ்சை விட்டு மறந்தோடுமா..?
இது தான் வாழ்க்கை...
இது தான் சொர்கம்...
அது தான் மீண்டும் திரும்பி வருமா..?
காலம் தான் எனக்கு அந்த பழைய வாழ்க்கயை திருப்பி தருமா..?

புதன், 8 ஏப்ரல், 2009

தவன்... கிறேன்...

படித்தவன் எழுதுகிறேன்...

பொங்கி வரும் அவள் செந்தமிழ் இதழ்களைப் படித்தவன்,,,
இன்று கவிதை எழுதுகிறேன்.

வரைந்தவன் இரசிக்கிறேன்...
கற்பனையில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவன்,,,
அதே ஓவியம் என் முன்னாடி நின்ற போது கண் அசைக்காமல் இரசிக்கிறேன்.

பார்த்தவன் வேர்க்கிறேன்...
இது வரை கண்டிராத அவள் அழகை பார்த்தவன்,,,
விழிகள் வேர்க்கிறேன்.

மறந்தவன் நினைக்கிறேன்...
மண் மீது நான் வாழ்ந்ததையே மறந்தவன்,,,
அவள் என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டும் அடிக்கடி நினைக்கிறேன்.

இறந்தவன் பிறக்கிறேன்...
அவளது முதல் பார்வையில் மூச்சு திணறி போய் இயந்தவன்,,,

மறுபடி ஒரு பார்வை பார்த்தால்...
மீண்டும் பிறக்கிறேன்.

காதலித்தவன் பேதலிக்கிறேன்...
அவள் முகவரி அறியாமல் அவளை காதலித்தவன்,,,

என் முகவரி தெரியாமல் இன்று பேதலிக்கிறேன்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

"மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...



"குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல"

இது பழய உவமை.
"
மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...
இது புதுமை.

உலகம்,,,
அழகான உருண்டை வீடு...
அதிலே எத்தனை எத்தனை கூடு.
இறைவன் இரவல் தந்த இருப்பிடம் அது.
அதனை அலங்கரிப்பதும்...
அதன் அழகை பறிப்பதும்...
மானிடா உன் பாடு.

அதன் ஒவ்வொரு சீற்றத்துக்கும் நீ தான் தர வேண்டும் இழப்பீடு.
வானம் என்னும் வெள்ளி தகடு...
பூமி பந்துக்கு அதுவே முக்காடு.
அது அனுமதி தந்தால்,,,
நீ ஆனந்த நீராடு.
அந்த மேக கருவறையும் இன்று கதி கலங்கி போய் நிற்கிறது கண்ணீரோடு.

செயற்க்கையை உருவாக்கினாய்...
உன் சௌகர்யத்துக்கு.
இயற்க்கையை அதற்கு இறையாக்கினாய்...

உன் சந்தோஷத்துக்கு.
நாளை இந்த உலக வழக்கை கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா..?
வினை செய்தவனே,,,
பலன் வந்து சேறும் உனக்கு.

உயர கட்டிடன்கள் உயர்த்தினாய்...
காடுகள் பலியானது.
காற்றின் உஷ்ன தன்மை உயர்ந்தது.
சொகுசாக செல்ல வாகனங்க்கள் உற்பத்தி செய்தாய்...
அது புகையை துப்பியது.
காற்றோ விஷ வாயுவை கக்கியது.

வானத்தில் ஒரு வாசல்...
"
ஓசொன்" படலத்தின் விரிசல்.
யார் போட்டது..?
இயற்க்கையின் விதியா..?

இல்லை,,,
மனிதனின் சதியா..?

சுனாமி...
பூகம்பம்...
சூராவளி...
உயிர்களை பலி கேட்டது.
இயற்க்கையின் சதியா..?

மனிதனின் கதியா..?

சுயநலம் நமக்கு வளம் இல்லை மானிடா...
நீ  இயற்கை அழிக்க இங்கே மரண ஓலம் அதிகரிக்கும் பாரடா.
நீ பிறந்த மண்ணை நீ மதிக்கா விட்டால்
மானிடா...
இயற்க்கையும் நம்மை பழிக்கும்...

இயற்க்கையும் நமது தோழன் தான் என்று புது உறவு கொடு,,,

இயற்க்கை உன்னை கட்டி அனைக்கும்.

உலகத்துக்கு நன்மை பயக்கும்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

உதிராத உறவு



நட்பு...
அந்த சொல்லுக்கு எத்துனைச் சிறப்பு.

சினேகம்...
அது சொர்க்கத்தில் உருவான ஒரு வேதம்.

தோழமை...
அது இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் கட்டாயம் உருவாக்கிக் கொள்ளும் உரிமை.

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் தான் மோதி செல்லும்...
சொந்தம் கூட சொல்லாமல் கொல்லாமல் ஒளிந்து கொல்லும்...
நட்பு என்பது அப்படி அல்ல,,,
குழந்தை பருவத்திலும் விளையாடி செல்லும்...
அரியாத வயதிலும் அலையாய் மோதிச் செல்லும்...
வாலிப வர்கத்திடம் விரும்பி அறும்பி கொல்லும்...
முடி நரைத்தாலும் நட்பு மட்டும் நரைக்காமல் இன்னும் நன்றியை மெல்லும்...
எமனிடம் சென்று முறையீடு செய்து,,,
மரணத்தையும் வெல்லும்.

செவ்வாய், 31 மார்ச், 2009

இயற்கையே எனது இருக்கை.


நீல வான மேகங்களே...
எனது நிலைமை அறிந்து சொல்லுங்கள்.
காற்றோடு காத்தாட காலங்காத்தாலயே சென்றது,,,
இன்னும் வரவில்லை.

குளிர் ஆடை போர்த்திய ஓடைகள்...
என் கணவை கண்டு பிடித்து சொல்லுங்கள்.
உறக்கத்துக்கு வாக்கப்பட்டு அது போனது,,,
எந்த தகவலும் இல்லை.

கண்கள் எல்லாம் மயங்கி போகும் அளவுக்கு கண்டாங்கி சேலை கட்டி நடந்துப் போகும் அந்தி சூரியனே...
எனது தற்போதைய நிலவரத்தை அறிந்து சொல்லுங்கள்.
அந்தி சாயும் நேரத்தில் நொந்து எங்கோ போனது,,,
ரொம்ப நாளாய் அங்கிருந்து மடல் கூட வரவில்லை.

இயற்கைகளே...
உங்களோடு நான் சமாதியாகி விட்டேன்.
எனக்கும் என் கவிதைகளுக்கும் நண்பர்கள் நீங்கள் தான்,,,
மனிதர்கள் இல்லை.

நட்பின் நெறி



நட்பு ஒரு நல்ல கவிதை...
பேனா முனையில் அது உறங்கிக் கொண்டிருக்கும் வரை.
அட்சரமாய் வந்து விழுந்து விட்டால்,,,
அது குருடன் கையில் கிடைத்த நிலை.

நட்பு ஒரு வீணை...
எந்த கரங்களாவது மீட்டி கொண்டிருக்கும் வரை.
மீட்ட யாரும் இல்லாத வேளையில்,,,
அதன் இருப்பிடம் வீட்டில் ஒரு மூலை.

நட்பு ஒரு பரவச பூக்களின் தோட்டம்...
அது வாடாத வசந்த நாள் வரை.
வாசம் அங்கே குறைந்து விட்டால்,,,
நட்புக்கும் நாளை இங்கில்லை.

நட்பு என் உயிர் நாடி...
நட்பு என் சுவாசம்...
இதன் உண்மை எல்லாம் அதை உறைப்பவனின் வாய் பேச்சு வரை.
இதயத்தை திறந்து பார்த்தால் எச்சில் கறை.

திங்கள், 23 மார்ச், 2009

அன்பே நீ எனக்கு,,,


அன்பே நீ எனக்கு,,,

மூங்கிலில் நுழைந்த சுக ராகங்கள் போல...

கோடையில் விழுந்த மழை துளி போல...

இருட்டுக்கு ஒலி வீசும் நிலவு போலே...

வெய்யிலுக்கு விரிந்த விருட்சம் போல...

தாகத்துக்கு தட்டுப் பட்ட தெப்பக் குளம் போல...

கண்ணீருக்கு வாக்கப் பட்ட கைக்குட்டை போல...

உழைப்பாளிக்கு ஒதுக்கப் பட்ட ஒரு நொடி உறக்கம் போல...

தத்தளிப்பவனுக்கு தென் பட்ட மிதவை போல...

பிச்சைக்காரன் தட்டில் விழுந்த சிவப்பு நோட்டு போல...

என் உடலுக்குள் ஊடுருவும் உயிர் போல...
இல்லை ஒரு ஜீவன்,,,
அன்பே...
உன்னைப் போல.

அகிம்சை அடுப்பு...


அகிம்சை அடுப்பு...
அதில் அமைதி எனும் நெருப்பு.
சத்தமில்லாமல் உலையில் வேகட்டும் பருப்பு.
மனிதா அறிந்து கொள் உனது பிறப்பு...
மனிதனாய் பிறந்து விட்டாளோ,,,
மற்ற உயிர்கள் எல்லாம் சாதா என்ற நினைப்பு.

கடல் அலையின் சத்தத்தில் கூடே இன்னும் சுனாமியின் மரண ஓலம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது...
கிராமத்து மண்ணில் கூட இன்னும் சாதி மதச் சண்டையால் சிந்திய இரத்த வாடைகள் இன்னும் என்னை மூச்சடைக்க செய்கிறது.

பூக்களை கூட அமைதியாக பூப்பதை விரும்பும் நமக்கு...
சிற்றுயிர்களை துடிக்க துடிக்க பலி கொடுக்கும் ஆர்வம் எதற்கு..?
கணவன் அடித்தால் ஏற்றுக் கொல்லும் மனப் பக்குவம் மனைவிக்கு...
ஒரு சிறு எறும்பு கடித்தாலோ ஏனோ அதன் மீது கொலை வழக்கு.

உயிர்கள் என்பது பெரிதேனும்...
அதுவே சிரிதேனும்...
உயிர் என்பது சமம் தானே.

உயிர்களை மதிப்பொம்...
வன்முறை வெண்டாம் என்ற சட்டம் விதிப்போம்...
பூக்களும் ஜனநாயகம் பேசுவதற்க்கு அனுமதி அழிப்போம்.