CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

திங்கள், 23 மார்ச், 2009

அகிம்சை அடுப்பு...


அகிம்சை அடுப்பு...
அதில் அமைதி எனும் நெருப்பு.
சத்தமில்லாமல் உலையில் வேகட்டும் பருப்பு.
மனிதா அறிந்து கொள் உனது பிறப்பு...
மனிதனாய் பிறந்து விட்டாளோ,,,
மற்ற உயிர்கள் எல்லாம் சாதா என்ற நினைப்பு.

கடல் அலையின் சத்தத்தில் கூடே இன்னும் சுனாமியின் மரண ஓலம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது...
கிராமத்து மண்ணில் கூட இன்னும் சாதி மதச் சண்டையால் சிந்திய இரத்த வாடைகள் இன்னும் என்னை மூச்சடைக்க செய்கிறது.

பூக்களை கூட அமைதியாக பூப்பதை விரும்பும் நமக்கு...
சிற்றுயிர்களை துடிக்க துடிக்க பலி கொடுக்கும் ஆர்வம் எதற்கு..?
கணவன் அடித்தால் ஏற்றுக் கொல்லும் மனப் பக்குவம் மனைவிக்கு...
ஒரு சிறு எறும்பு கடித்தாலோ ஏனோ அதன் மீது கொலை வழக்கு.

உயிர்கள் என்பது பெரிதேனும்...
அதுவே சிரிதேனும்...
உயிர் என்பது சமம் தானே.

உயிர்களை மதிப்பொம்...
வன்முறை வெண்டாம் என்ற சட்டம் விதிப்போம்...
பூக்களும் ஜனநாயகம் பேசுவதற்க்கு அனுமதி அழிப்போம்.

0 கருத்துகள்: