CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

ஞாயிறு, 8 மார்ச், 2009

உன் பிரிவு...என் உயிரின் மறைவு


பேசாதே பெண்ணே,,,
நீ பேசினால் பெருமளவில் உலக இரகசியங்கள் அம்பலப் படலாம்.

பார்க்காதே நிலவே,,,
நீ பார்வை வீசினால் இரவு நிலை குழைந்து போகலாம்.

நடக்காதே நதியே...
நீ நிலவின் வீதியில் நடந்தால் வெட்கப் பட்டு மீன்களும் வயதுக்கு வரலாம்.

இமைக்காதே இமையே,,,
நீ கண் அசைத்தாலே விண்மீன்கள் உன் கண்களிலிருந்து விண்ணுக்கு புறப்படலாம்.

உலராதே உறவே,,,
உன் உலரலில் சிதறிய உமிழ்கள் தமிழுக்கு உவமைகள் ஆகலாம்.

அழாதே அழகே,,,
உன் ஒரு துளி கண்ணீர் விழுவதால் ஆற்று நீர் கூட உப்பு கரிக்கலாம்.

பிரியாதே பூவே,,,
உன் பிரிவை தாங்க முடியாமல் என் உயிரும் என் உடலை விட்டு பிரிந்து போகலாம்.

0 கருத்துகள்: