CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

திங்கள், 2 மார்ச், 2009

யாரெல்லாம் அடிமைகள்..?


மாமனார் வீட்டுக்கு மாப்பிள்ளையாய் போனவன்...

தனது உரிமையை தொலைத்த அடிமை.

கந்து வட்டிக்கு கடன் வாங்கியவன்...
வட்டியை கூட கட்ட முடியாமல் மண்டி போடும் அடிமை.

பணக்காரர்கள் கூட்டத்தில் ஓர் எழை...
தனது சுயமரியாதையை விட்டுக் கொடுத்த அடிமை.

நாட்டை விட்டு ஒதுக்க பட்ட அகதிகள்...
தன் தற்க்காலிக கூட்டுக்கு அடிமை.


பணத்தின் மீது மனம் வைத்தவன்...
பணத்துக்கு அடிமை.

தாலி கழுத்தில் ஏறியதும்,,,
மனைவி கணவனுக்கு அடிமை.

சமையல் கட்டுக்கு சீதனமாய் போன மங்கையர்கள்...
மற்ற நேரம் சீரியலுக்கு அடிமை.

மாதச் சம்பளம் வாங்குபவன்,,,
தன் முதலாளிக்கு அடிமை.

இவை யாவுமே காலம் உருவாக்கிய அடிமைகள்.

உயர்வானே அடிமைகள்...
இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்கள்.
காலம் முழுவதும் கடமை பட்ட அடிமைகள்.
நாம் யாவரும் கடவுளின் அடிமைகள்.

0 கருத்துகள்: