CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வியாழன், 12 மார்ச், 2009

புனிதமான பூக்கள்



பூக்களே...
ஏன் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் முக ஒப்பணை செய்துக் கொள்வதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் என்றுமே வாசம் வீசுகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் வாசனை திரவியம் பூசிக்கொள்வது இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் வண்ண வண்ணமாய் விளைகின்றீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் நீங்கள் குடை பிடிப்பதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய் பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் ஊமையாய் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று மற்றவர்களை புறம் பேச உங்க்களுக்கு அவசியம் இல்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உதிர போகும் நாளை நீங்கள் நினைப்பதில்லை.

பூக்களே...
ஏன் நீங்கள் எங்களால் போற்ற படுகிறீர்கள் தெரியுமா..?
உங்களைப் போன்று புனிதமாய் நாங்கள் கொஞ்சம் கூட இல்லை

2 கருத்துகள்:

kalaivani சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
kalaivani சொன்னது…

புது பழமொழி
ஆக்கப்படுவதும் ஆண்ணாலே
அழிகப்படுவதும் ஆண்ணாலே