CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சுனாமி


(சுனாமியின் சீற்றத்தால் என் கண்கள் அழுத போது விளைந்த கண்ணீர் ஊற்றுகள்)

ஹேய் நிலமே...
ஹேய் நிலமே...
உனக்கும் கூட எங்கள் மேல் இரக்கம் இல்லையா.
நாங்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.
எங்களுக்கெல்லாம் இந்த பூமியில் வாழ இடம் இல்லையா..?

எத்தனை கனவுகள்...
எத்தனை ஆவல்கள்...
எத்தனை ஆசைகள்...
எல்லாம் உன் மடியிலே கலைந்தது பார்த்தாயா...
அதுவும் உன் தயவாலே சிதைந்தது பார்த்தாயா...

பூமி தேவதையே...
உன்னை நம்பி எத்தனை உயிர்கள்.
கண்கள் களைப்பாரும் வேலையிளே,,,
கண்கள் விழிக்காதபடி செய்து விட்டாயே.

பத்து மாதங்கள் சுமந்த தாயை விட நீ உயர்ந்தவள் அல்லவோ...
உன் பிள்ளைகளை நீயே விழுங்கியது சரியாமோ.
பொறுமை காக்கும் புண்ணியவதியே,,,
இது தான் தாய்மையின் குணமோ.

பச்சை மழலைகள் பட்டினியிலே...
பால் கொடுத்த தாய் உன் வயிற்றுக்குள்ளே.
பிள்ளைகளை இழந்த தாய் கண்ணீரிலே...
மண்னை அரியாத மழலைகள் மண்ணுக்குள்ளே.
உலகே சவக்கிடங்காகி கிடக்குதே...
நீ விழுங்கி துப்பிய அரைகுறைஉடல்களில் இரத்தம் இன்னும் காயலே.
உடமை இழந்த நடைகளின் விதி வீதியிலே...

உயிரை வாங்குவதல்லவோ உன் பணி
உயிரை வார்பதுதனோ
கடமை தவரிய காட்டேரியே
சொக்கனின் பணி உனகெதற்கு

பாவி மகளே,
யாருக்கு நீ வைத்த குளியோ...
அம்பை ஏய்து விட்டாய்....
அண்டங்களை சிதைத்து விட்டாய்....
நிலங்களை பிளந்துவிட்டாய்....

ஒரு நொடி கோபத்துக்கு
ஓராயிரம் கோரங்கள்....
ஒரு நாள் கூத்துக்கு....
குவிந்திருக்கும் பிணங்கள்....


கட்டிட இடுபடுகளுக்கிடையே.....
உயிர் இருந்தும் பிணமாக...
அளுகுறல் கேட்கலையோ....
காப்பாற்ற யாராவது வருவார் என்று ஆவலுடன்.....

நாங்கள் செய்தால் கொலை- அதை
நீ செய்தால் இயற்கை தவறா?

ஆதாரம் சொல்லலாம்.....
அது இயற்கையின் சீற்றம் என்று....
எந்த நீதி கூண்டிலும் நின்று சொல்வேன்-
இது நீ செய்த குற்றம் என்று.....

0 கருத்துகள்: